Thursday 28 January 2016

ஜனவரி - 28, முதன் முதலில் சென்னையில் தொலைபேசி...

வரலாற்றில் இன்று - சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல்   டெலிபோன் கம்பனி சென்னை எர்ரபாலு செட்டி தெருவில் 1882ம் ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டுமே.  இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்தான். அவ்வாறு உருவான தொலை பேசி நிலையத்தின் மூலம்  முதலாவது தொலைபேசி அழைப்பு கொடுக்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும் பிராட்வே யிலிருந்த Beehive  Foundry என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த இணைப்பு கொடுக்கப்பட்டது.   பேசப்பட்ட நாள் ஜனவரி 28, 1882.  அதற்கு அடுத்த ஆண்டுதான் அதாவது 1983ம் ஆண்டு . இந்தியாவின் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளும் அஞ்சல் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.

No comments: