Saturday 23 January 2016

சென்னை குடியரசு தின விழா: போடி பள்ளி மாணவி தேர்வு . . .

சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்க போடி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .சென்னையில் 67 ஆவதுகுடியரசு தின விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு துறைகள் சார்பில் வாகன அணி வகுப்பு, பள்ளி கல்வித்துறை சார்பில் நாட்டு நலப் பணித்திட்டம், பசுமைபடை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் அணி வகுப்பு நடைபெற உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள்அணி வகுப்பில் பங்கேற்கதேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கோபால் மகள் ஜி.கோகிலா (17) என்றமாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் போடி கருப்பசாமி கோவில் தெற்குதெருவில் வசித்து வருகிறார். இவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி. தாயார் சரோஜா கூலித் தொழிலாளி.தேனி மாவட்டத்தில் முதன் முதலாக அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவி இவர் ஆவார். நமது பாராட்டுக்கள்...

No comments: