Saturday 2 January 2016

பொதுத்துறை காப்போம் . . .சுதந்திர போராட்ட வீரர் தோழர்.என். சங்கரய்யா உரை ..

திண்டுக்கல் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நடைபெறும் 15வது மாநில மாநாட்டையொட்டி ஒரு மகத்தான இளைஞர் பேரணியை நடத்தி உள்ளனர் . . .சுதந்திர போராட்ட வீரர் தோழர்.என். சங்கரய்யா.94 வயதிலும் அதே கர்ஜனை; சிம்மக் குரலில் வசீகரிக்கப்பட்டு மொத்த இளைஞர் கூட்டமும் அந்தப் பேச்சில் கட்டுண்டு கிடந்தது... தோழர் என்.சங்கரய்யா... இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்; விடுதலைப் போராட்ட வீரர்... திண்டுக்கல் மண்ணில் வியாழனன்று இரவு நடந்த அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர் படையை கண்டு, உணர்ச்சி பொங்க, இந்தப் படை இருக்கும் போது எனது நம்பிக்கை பலமடங்கு பலமாகிறது என கண்கள் பனிக்க... கம்பீரமாக உரையாற்றினார்...
 பொதுத்துறை காப்போம் . .
இந்திய பெருமுதலாளிகளுடைய தாராளவாதத்தை எதிர்க்க வேண்டும். சென்னையில் வெள்ளம் வந்த போது இணையத்தளம் ஸ்தம்பித்தது. பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் தான் அந்த பிரச்சனையை சரி செய்தது. மக்கள் அவதிப்பட்டபோது எந்த ஆம்னி பஸ்களும் வரவில்லை. அரசுப் பேருந்து தான் வந்தது. போக்குவரத்தை சீர்செய்தது. எனவே தான் இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றார் .

No comments: