Monday 29 September 2014

30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு...

30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு போராட்டம். . . .
அருமைத் தோழர்களே! எதிர்வரும் 30-செப்- அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணிவரை ஆக மொத்தம் 2- மணி நேர வெளிநடப்பு போராட்டம் நமது BSNL ஊழியர் சங்கங்கள் JAC சார்பாக இந்திய நாடுமுழுவதும் 3 வது கட்ட போராட்ட மாக மிகவும் சக்தியாக நடத்தவேண்டியுள்ளது. இப் போராட்டத்திற்கு பிறகும் BSNL நிர்வாகமும், மத்திய அரசும் நமது BSNL ஊழியர்களின் 30 அம்ச கோரிக்கையை தீர்க்க வில்லையெனில், அடுத்தகட்டமாக நவம்பர் முதல் வாரத்தில் நமது மத்திய சங்கங்களின்  JAC கூடி காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட முடிவெடுக்கும். 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தின் போது ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் JAC சார்பாக கோரிக்கை விளக்ககூட்டமும், ஆர்பாட்டமும் நடத்திட வேண்டுகிறோம்.

--- என்றும் தோழமையுடன் S.சூரியன், D/S-BSNLEU.

No comments: