Wednesday 3 September 2014

சீட்டுக்கம்பெனி மூலம் ரயில்வே ஊழல் மம்தா சிக்குகிறார்.

சாரதா சீட்டுக் கம்பெனியைப் பயன்படுத்தி, ரயில்வே துறையில் நடந்தஊழல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதில்,மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தொடர்பு இருப்பது தெரியவந் துள்ளது.மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்களில் ஏராளமான மக்களின் சேமிப்புப் பணத்தை சூறையாடிய சாரதா சிட்பண்ட் வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் சிக்குவாரா என்ற பரபரப்பு ஏற்கெனவே எழுந்துள்ளது. இது தொடர்பாக மம்தாவை சி.பி..,விசாரிக்க வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சாரதா சீட்டுக்கம்பெனி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து முதிர்வு பெறும் காலத்தில்பல மடங்கு பணம் தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 2013 ஏப்ரலில் இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் மம்தா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர் ரயில்வே துறைஅமைச்சராக இருந்த போது சாரதா நிறுவனத்திற்கு ரயில்வேயுடன் இணைந்து சுற்றுலா மற்றும் உணவுப் பரிமாற்றம் தொடர்பான கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. 2010ல் .ஆர்.சி.டி.சி., - சாரதா குழுமம் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள யாத்திரை தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்வது, அவர்களுக்கு உணவு தயாரிக்கும் கேட்டரிங் ஆகியவற்றை எடுத்து செய்து வந்தது. இதற்கானபாரத்தீர்த்திட்டம் என மம்தாதனது 2010-11 ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகம்செய்தார். இந்த திட்டத்திற்கு 18 சிறப்பு ரயில்கள் ஒதுக்ககப்பட்டன.சாரதா சிட்பண்ட் போல் இந்ததிட்டத்திலும் பல்வேறுசந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், மம்தாவுக்கும், இந்த நிறுவனத்திற்கும் எந்தமாதிரியானடீலிங்இருந்தது என இது தொடர்பாக மம்தாவை சி.பி.., விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஐ வட்டாரம் தெரி விக்கிறது.

No comments: