Thursday 21 July 2016

21-07-16 கருத்தாளாம் மிக்க மதுரை வடக்கு கிளை மாநாடு .

அருமைத் தோழர்களே ! 21-07-16 அன்று மாலை நமது மதுரை மாவட்ட சங்க அலுவலக த்தில் கிளைத் தலைவர், தோழர் மரிய ஜோசப் குழைந்த  நாதன் அவர்களின் தலைமையில்  மதுரை வடக்கு கிளை மாநாடு மிக்க  சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சலி உரையை  தோழர்.R. குமார் நிகழ்த்தினார்.  வரவேற்பு உரையை கிளை செயலர் நிகழ்த்தினார், 
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர்  தோழர் . எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அதன்பின்  ஆண்டறிக்கை , வரவு- செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற  நிர்வாகிகள் தேர்வில்  முறையே தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள்   தோழர் மரிய ஜோசப் குழைந்த  நாதன், சிக்கந்தர், குமார் ஆகியோர் உட்பட அனைத்து நிர்வாகிகளும், ஒரு மனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   தேர்ந்தெடுக்க ப்பட்டனர், புதிய நிர்வாகிகளை வாழத்தி  தோழர்கள், செல்வம், மானுவேல் பால்ராஜ், மாயாண்டி,  சுப்புராயலு,  நெடுஞ்செழியன்  , என், சோணைமுத்து ஆகியோர்  பேசினார்.  மாவட்டத்த    லைவர் தோழர் சி . செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் சிக்கந்தர் நன்றி கூற  மாநாடு இனிதே நிறைவுற்றது.

No comments: