Sunday 31 July 2016

3-8-16 மதியம் 1 மணிக்கு மதுரை G.M (O)ல் ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! மத்திய BJP அரசு ஆட்சிக்கு வந்தவுடன், பிளானிங் கமிஷன் என்று பல ஆண்டுகளாக நடப்பில் இருத்த அமைப்பை கலைத்து விட்டு, உருவாக்கிய நித்தி ஆயோக் அமைப்பு  மோசமான பரிந்துரையான நமது  BSNL, MTNL நிறுவனங்களின் பங்குகளை "கேந்திர விற்பனை"  என்ற பெயரில் விற்பது, என்ற ஆலோசனையை அறிவித்துள்ளது. அதனை  எதிர்த்து, 03-08-2016 அன்று BSNL, MTNL சங்கங்கள் சார்பாக அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்ப ட்டுள்ளது

அதன்படி, நமது  மதுரை மாவட்டத்தில், 03.08.2016 அன்று 1 மணிக்கு, மதுரை G.M. அலுவலகத்தில் மதுரை மாவட்ட FORUM சார்பாக BSNLEU, SNEA, AIBSNLEA, BSNLOA ஆகிய சங்கங்கள் சார்பாக  ஆர்பாட்டம் நடைபெறும். 

மாவட்ட சங்க நிர்வாகிகள், அணைத்து கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், மற்றும் அனைவரும் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்   திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். போராட்ட வாழ்த்துக்களுடன், என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்.

No comments: