Tuesday 26 July 2016

25-07-16 திருப்திகரமான திருநகர் கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU திருநகர் கிளையின் மாநாடு தோழர் .T. டேனியல் ராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்க கொடியை தோழர். A.சுந்தரராஜன் ஏற்றிவைத்தார். அஞ்சலி உரையை தோழர்.A.A. ஜூலியஸ் நிகழ்த்தினார். வரவேற்புரையை தோழர் V. நாராயணன் நிகழ்த்தினார்....
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் T. டேனியல் ராஜ்,  V. நாராயணன்,  K. பாலகுரு ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, இம்மாதம் பனி  பெரும் தோழர்.A.A. ஜூலியஸ் அவர்களுக்கு பணிநிறைவு விழா நடைபெற்றது. வாழ்த்துரையாக ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், N.செல்வம், R.சண்முகவேல், TNTCWU மாவட்ட தலைவர். தோழர் .k.வீரபத்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக கிளை பொருளர் தோழர். K. பாலகுரு நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது....என்றும் தோழமையுடன், S. சூரியன், D/S-BSNLEU.

No comments: