Sunday 1 June 2014

01.06.14 சர்வதேச குழந்தைகள் தினம் . . .

.பி.யில் தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதுதில்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் படான் நகரின் அருகில் உள்ள ஒரு கிராமத் தைச் சேர்ந்த இரண்டு தலித் சகோதரிகள் (வயது 14, 16) வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, மரத்தில் தொங்க விடப்பட்டதைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் சார்பில் சனிக் கிழமையன்று காலை புதுதில்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு கொலை செய்யப்பட்ட இரு தலித் சிறுமிகளும் இரண்டு காவல்துறையினர் உட்பட ஏழு கயவர்களால் கொடூரமான முறையில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேற்படி இரு காவல்துறையினரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர்டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.இருவர் கைதாகியுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஒரு குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பங்களுக்குச் சென்று விவரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினர். சனிக்கிழமையன்று காலை புதுதில்லி உத்தரப்பிரதேச பவன்முன்பு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இக்கொடூரக் கொலைகள் தொடர்பாக மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ஜக்மதி சங்வான், துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக ஆசிரியர் சம்மேளனம், ஜனநாட்டியமஞ்ச், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பிலும் கண்டன உரையாற்றினார்கள். சிபிஐ விசாரணைஇதனிடையே தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக .பி. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்

No comments: