Sunday 1 June 2014

04.06.14 நடக்க இருப்பவை "பெருந்திரள் ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 04.06.14 புதன் மதியம் 1 மணிக்கு, மதுரை G.M அலுவலகத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்திட 24.05.14 அன்று பழனியில்,நமது தமிழ் மாநிலச்செயலர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நமது மதுரை மாவட்ட செயற்குழு முடிவு எடுத்துள்ளது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
மாவட்டசெயற்குழு முடிவுகளை விளக்கியும், போராட்டதிட்டங்களையும் விளக்கி நமது 36 கிளைகளிலும் ஒரு குறிகிய காலத்தில்  நமது அனைத்து கிளகூட்டங்களையும் விரிவாக,சிறப்பாக நடத்தப் பட்டுள்ளது. அத்தோடு செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம். ஒருரிரு பிரச்சனைகள் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்துப் பிரச்சனைகளின் தீர்விலும் பெரியஅளவில் முன்னேற்றம் இல்லை.எனவே, நமது மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் 4.6.14 புதன் மதியம் 1 மணிக்கு பெருந்திரள்  ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்திட அனைத்து கிளைகளும் இப்போதிருந்தே திட்ட மிட்டு தயாரிப்பு பணிகளை செய்திட வேண்டுமாய் மாவட்ட மையம் அனைத்து கிளைகளையும் கேட்டுக் கொள்வதோடு, ஆங்காங்கே உள்ள மாவட்ட நிர்வாகிகள் இப்பணிக்கான வலிகாட்டு தலுடனான உதவிகளை செய்திட வேண்டுகிறோம். 
போராட்ட வாழ்த்துக்களுடன் ....எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

No comments: