Sunday 1 June 2014

விருது நிதி ரூ.10000 தமுஎகசவுக்கு அருணன் வழங்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன் தமக்கு விருது தொகையாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை தமுஎகசவின் தோழர் கே. முத்தையா நினைவு அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.பேராசிரியர் அருணனு க்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் வெள்ளையன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். இந்த விருதுடன் வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரத்தை தமுஎகச வின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.முத்தையா நினைவு அறக்கட்டளை நிதிக்கு வழங்குவதாக அருணன் அறிவித்துள்ளார்.தோழர்.அருணனின் தொண்டுள்ளம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.

No comments: