Tuesday 1 October 2013

30.09.2013 புத்துனர்வு உண்டான செயற்குழு...

அருமைத்தோழர்களே!அனைவருக்கும் வணக்கம்,
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 30.09.2013 அன்று தல்லாகுளம் CSC/TRCயில் மாவட்ட துணைத்தலைவர் தோழர். P.கணேசன் தலைமையில், மிக,மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயற்குழுவை வழிநடத்த மாநிலசங்க நிர்வாகிகள் தோழர்கள், M.நாராயணசாமி, A.பாபு ராதாகிருஷ்ணன், S.ஜான் போர்ஜியா,C. செலவின் சத்தியராஜ் ஆகியோர் வந்திருந்து உதவி செய்தனர். செயற்குழு மாவட்ட சங்கத்திற்கு வந்திருந்த சில மாவட்ட சங்க பதவிகள் ராஜினாமாக்களை பரிசிலித்து ஏற்று கொண்ட செயற்குழு, சம்மந்தப்பட்ட கடிதங்களில் அவர்கள் தொடர்ந்து மாவட்ட சங்கத்தின் மீது எழுப்பிவரும் பொய் பிரச்சாரங்களை மாவட்ட செயற்குழு நிராகரித்தது.மேலும் அந்த பொய் உரையாளர்கள் கடந்த நவம்பர் 2012 முதல் மாவட்ட சங்கத்தால் எச்சரிக்கப்பட்டும், அவர்களின் தொடர் சங்க விரோத போக்குகள் குறித்து விளக்க கடிதம் கொடுக்கப்பட்டும், மாநில சங்கத்தால், சங்க சீர்குலைவு வாதிகளின் போக்கை மாற்றிக்கொள்ள பல வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.மாறாக அந்த சீர்குலைவு வாதிகள் NFTE சங்கத்திற்கு செல்வதற்க்கான திட்டத்தில்தான் இப்படி நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே, மாநில சங்கத்திடம் உரிய முறையில் மாவட்ட சங்கம் பல தடவை எடுத்துக் கூறி உள்ளது என்பதை செயற்குழு பதிவு செய்தது. இத்தருணத்தில் நமது உறுப்பினர்களிடம்  உண்மையை எடுத்துக் கூறி கவனப்படுத்த வேண்டுமாய் கிளை செயலர்களுக்கு, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு செயற்குழு வழிகாட்டியது.
மதுரை மாவட்ட லோக்கல் கவுன்சில், மற்றும் வொர்க்ஸ் கமிட்டி களுக்கான காலி இடங்களை மாவட்ட செயற்குழு பூர்த்தி செய்தது.






















































திண்டுக்கல்லில் 2013 நவம்பர் 8,9 தேதிகளில் நடைபெறும் மதுரை 

மாவட்ட 7வது மாநாடு
நமது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்க்கான அனைத்து பணிகளையும் வரவேற்புகுழு மிக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறது.அதே யத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளும் மாவட்ட சங்கம் குறிப்பிட்டுள்ள நன்கொடைகளை உரிய காலத்தில் நிறைவேற்றிட வேண்டுமாய் மாவட்ட செயற்குழு கேட்டுக்கொண்டது.
உற்சாகம் ஊட்டிய செயற்குழு....
செயற்குழுவில் கிளைகளுக்கு நிர்ணயம் செய்த நன்கொடை போக, வந்திருந்த தோழர்கள் அனைவரும், தங்களது தனி நபர் நிதியாக  ரூபாய் 50000 க்கும் மேல் வாரி, வாரி  வழங்கி  உற்சாகம் ஊட்டினார்கள் என்பது பாராட்டுக்குரிய விசயமாகும். மாவட்ட உதவி செயலர் தோழர்.G.K. வெங்கடேசன் நன்றி உரையுடன் மாவட்ட செயற்குழு இனிதே நிறைவுற்றது. மாவட்ட மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்டு நன்கொடைகளை அள்ளி,அள்ளி தந்த அனைத்து உள்ளங்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.     
தோழமை வாழ்த்துக்களுடன்,
எஸ். சூரியன் - மாவட்ட செயலர்.

No comments: