Friday 22 May 2015

10ஆம் வகுப்பு தேர்வில் 41 மாணவ- மாணவிகள் முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
192 மாணவ- மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.
540 மாணவ-மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த மாணவர்களில் 4 பேர் கடலூரை சேர்ந்தவர்கள் ஆவர்.
பிற மொழிகளில் படித்த 5 மாணவர்கள் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் 586 பேர் சதம்
586 மாணவ-மாணவிகள் தமிழ் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் சதம்
ஆங்கிலம் பாடத்தில் 644 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணிதத்தில் 27,134 பேர் சதம்
கணித பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியலில் 1,15,853  பேர் சதம்
அறிவியல் பாடத்தில் 1,15,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் சதம்
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
51,629 மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

No comments: