Tuesday 26 May 2015

காஷ்மீர் BSNL அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் படுகாயம்.

காஷ்மீர் மாநிலத்தில் BSNL அலுவலகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபரே நகரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தின் மீது திங்களன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச் செயலை, நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்  வன்மையாக கண்டிக்கின்றது.

No comments: