Tuesday 26 May 2015

நானே ராஜா... நானே மந்திரி ! . . .

மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் அவருடைய நாடாளுமன்றச் செயல்பாடு எப்படி இருக்கிறது? மோடி பிரதமர் பதவி வகித்தமுதல் 5 மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதைவிட, அயல்நாட்டு நாடாளுமன்றங்களில் பேசியதுதான் அதிகம் என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. உண்மை.தவிர்க்கவே முடியாத தருணங்களில்தான் நாடாளுமன்றத் துக்கு வருகிறார் மோடி. சரக்கு சேவை வரிகள் தொடர்பாகக் கொண்டுவந்த திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது கூட அவர் அவைக்கு வரவில்லை.எதிர்க் கட்சி உறுப்பினர்களைவிடுங்கள், தன்னுடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடனும், அமைச்சர் களுடனும்கூடப் பேசுவதில்லை மோடி. மோடி வெளிநாடு சென்றுவந்தால் அந்தப் பயணம்பற்றிய அறிக்கையைக்கூட வெளியுறவு அமைச்சர்தான் அவருக்குப் பதிலாக வாசிக்கிறார். மன்மோகன் சிங்கைமவுன மோகன் சிங் என்றே கேலி செய்தவர் மோடி. அவரைவிட அதிகமாகவே மவுனம் சாதிக்கிறார்.ஆனால், இதில் எல்லாம் ஆச்சரியமே இல்லை. மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தவர் சக்திசிங் கோ`ஹில். அவர் சொல்கிறார்:
குஜராத்தில் முதல்வராக இருந்தபோது பேரவையை எப்படி நடத்தினாரோ, பேரவையில் எப்படி நடந்துகொண்டாரோ அதையேதான் நாடாளுமன்றத்திலும் செய்கிறார் மோடி. ஒரு சமயம் எதிர்க் கட்சி உறுப்பினர்களை சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டு 12 சட்டங்களை 17 நிமிஷங்களில் நிறைவேற்றினார். அவர் முதல்வராக இருந்தபோது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை, சம்பிரதாயத்துக்காக மட்டுமே கூட்டப்படும். இதுதான் குஜராத் மாதிரிஎன்கிறார் கோயல்.ஆனாலும், தில்லியை முழுமையாக காந்திநகர் ஆக்கிட முடியவில்லை மோடியால் என்றே சொல்ல வேண்டும். இரட்டை அடுக்கு நாடாளுமன்றம், பல கட்சிகளைக் கொண்ட வலுவான எதிர்க் கட்சி, அவையில் நடப்பதைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துவரும் தேசிய ஊடகங்கள் இருப்பதால் குஜராத்தில் நடத்தியதைப் போல தில்லியில் நாடாளுமன்றத்தை மாற்ற முடியவில்லை.
மோடி பேசாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் பேசுகின்றனஇருஅவைகளும் எப்போதையும்விட அதிகம் பணியாற்றுகின்றன. ஆனாலும்,உள்ளடி வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்றை மற்றதற்கு எதிராக நிறுத்தும் முயற்சி நடக்கிறது. நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று காட்டியே அவைக்கு வந்தவர், அந்தக் கோயிலில் ஒரு கருவறைதான், ஒரு தெய்வம்தான் இருக்க வேண்டும்; அதற்கு எந்த எதிர்ப்பும் கூடாது என்று கருதுகிறார். மசோதாக்களை விரைவாகநிறைவேற்ற வேண்டும் என்ற போர்வையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களின் பரிசீலனைகளுக்கே மசோதாக்கள் அனுப்பப்படுவதில்லை.புதிய மசோதாக்கள் கூடுதல் அவை நடவடிக்கையாக அவையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.சில சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதா, நிதி மசோதா என்ற பெயரில் கொண்டுவரப்படுகின்றன. மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால் எதிர்க் கட்சிகள் அதைத் தடுத்து நிறுத்திவிடும் என்பதற்காகநிதிமசோதாஎன்று கூறுகின்றனர். அது மாநிலங்களவையில் தோற்றாலும் மீண்டும் மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றி சட்டமாக்கிவிடலாம்.புதிய நாடாளுமன்றத்தின் முதல் இரு தொடர்களில் எதிர்க் கட்சிகள்நிதானம் காத்தன. ஆனால், 2014 குளிர்காலக் கூட்டத் தொடரிலிருந்து தாக்குதலில் இறங்க ஆரம்பித்துவிட்டன.
சமீபத்திய நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 திருத்தங்களை எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து கொண்டுவந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 முறைதான் இப்படி நடந்திருக்கிறது. இந்த முறை இப்படி நடக்கதன்னுடையஅரிதான உரையில் காங்கிரஸையும் கம்யூனிஸ்ட்டுகளையும் வம்புக்கு இழுத்த மோடியின் பேச்சே காரணம்.இந்த திருத்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த சீத்தாராம் யெச்சூரி, “நான் பேசுவதை மோடி கேட்க இங்கிருந்தால் திருத்தத் தீர்மானத்தை விலக்கிக்கொள்வேன். ஆளும் தரப்பினர் மோதலை விரும்புகின்றனர்,எனவே, மோதிப்பார்ப்போம்என்று கூறி அதில் உறுதியாக இருந்தார். ஒருவரே எல்லாம் என்ற பிரதமரின் யுகத்தில் எதற்கும் தயார் அணுகுமுறையில் எதிர்க் கட்சிகள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!அதிகம் உதிர்க்கப்பட்ட 5 வாக்கியங்கள்தேநீர் விற்றுத்தான் இன்று இருக்கும் நிலையை நான் அடைந்திருக்கிறேன்.எளிதான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்றால் நான் பிரதமராகியிருக்கக் கூடாது. நான் பிரதமரானதே கடினமான பணிகளைச் செய்வதற்காகத்தான்.நான் இதயத்திலிருந்து பேசுகிறேன்.ஏழையான எனக்கு ஏழைகளின் தேவை என்ன என்று தெரியும்.நான் உங்களிடம் உறுதியளிக்கிறேன். நீங்கள் 12 மணி நேரம் உழைத்தால் நான் 13 மணி நேரம் உழைப்பேன். நீங்கள் 14 மணி நேரம் உழைத்தால் நான் 15 மணி நேரம் உழைப்பேன்.நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல, பிரதான சேவகன்  ……!நன்றி : ‘தி இந்து’ (தமிழ்)

No comments: