Sunday 3 May 2015

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்ட மாநாடு.

அருமைத் தோழர்களே ! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் இணைந்த 2 வது மாவட்ட மாநாடு, 2.5.15 சனியன்று மதுரை தியாகி லீலாவதி அரங்கத்தில் தலைவர் தோழர். ராஜகோபால் தலைமையில் மிக சக்தியாக நடைபெற்றது. மாநாட்டை தோழர்.மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர்.செல்லகண்ணு வேலை அறிக்கையை சமபித்தார். தோழர்.சுரேஷ் கண்ணா வரவு-செலவு கணக்கை சமர்பித்தார். கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொண்ட மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தோழர். ஆர்.அண்ணாதுரை மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார். CPI(M) புறநகர் மாவட்ட செயலர் தோழர்.சி. ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.  பின் பல்வேறு தலித் அமைப்புகளில் இருந்து அதன் தலைவர்கள் மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள். 
 உணவு இடைவேளைக்குப் பின் தனித் தனி குழுவிவாதங்கள்  நடைபெற்றது. அக்குழு விலிருந்து வந்த கருத்துக்களை தலா ஒருவர்வீதம் விவாதத்தில் பங்கெடுத்து உரை யாற்றினார். மாநாட்டில் 45 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்குழு மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தது. இறுதியாக  தமிழ் மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலர் தோழர். சாமுவேல்ராஜ்  நிறைவுரை நிகழ்த்தினார். தோழர்.  சங்கரலிங்கம் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

No comments: