Tuesday 11 August 2015

11.08.15 மாவட்ட BSNL-FORUM கூட்டம்...

அருமைத்தோழர்களே! 11.08.15 அன்று நமது மதுரை தொலை தொடர்பு  மாவட்ட BSNL-FORUM கூட்டம் SNEA மாவட்ட செயலர். தோழர். K. தெய்வேந்திரன் தலைமையில் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக  நடை பெற்றது ... கூட்டத்தில்  கீழ்க்கண்ட நான்கு ஆய்படு பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.
* 12.08.15 நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் 
* 10.08.15 முதல் 22.08.15 வரையிலான "அஞ்சல் அட்டை" இயக்கம்.
* 02.09.15 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.
* BSNLலில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு 9 To காலை 7 Free call, மற்றும் 
   இந்திய முழுமைக்கான ரோமிங் Free - BSNLவளச்சி பணி 
நடைபெற்ற FORUM கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர்கள், C.செலவின் சத்தியராஜ், S.சூரியன், SNEAசார்பாக தோழர்,K.தெய்வேந்திரன், AIBSNLEA சார்பாக தோழர். S.சுப்பிர மணியன், TEPU சார்பாக தோழர்.N.முருகன், SNATTA சார்பாக தோழர்.P.அழகு பாண்டியராஜா, WRU சார்பாக தோழர்கள்,G.P. பாஸ்கரன், L. கண்ணன், TSOAசார்பாக தோழர்.பாலகுமார், SEWAசார்பாக தோழர்கள். S.கந்தசாமி, சுந்தரம் AIBSNLEOA  சார்பாக தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் முடிவினை அமல்படுத்துவதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார். AIGTEOAசார்பாக தோழியர் வைரமதி  அவர்கள் முடிவினை அமல்படுத்துவதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொள்ளாத NFTE & FNTO ஆகிய  சங்கங்களை இயக்கத்திற்கு தொடர்ந்து அணுகுவது என தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து இயக்கங்களையும் சக்தியாக நடத்திட திட்டமிடப்பட்டது. மதுரை மாவட்ட BSNLவளச்சிப்பணிகள் குறித்து ஒரு பிரத்தியோக கூட்டம் கூட்டி விவாதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்...D/S-BSNLEU.

No comments: