Saturday 8 August 2015

IPL-வியாபம் ஊழல்களில் உயர்மட்ட விசாரணை நடத்துக! ஊழல் அமைச்சர்களே பதவி விலகுக! நாடாளுமன்ற நுழைவாயிலில் இடதுசாரி எம்பிக்கள் தர்ணா.

ஊழல் பாஜக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வெள்ளி காலை இடதுசாரி எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்கியதிலிருந்தே, ஐபிஎல் ஊழலில் சம்பந்தப்பட்ட லலித்மோடிக்கு உதவியுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே ஆகியோரும், ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் உயிர் பறிக்கப்பட்டுள்ள மத்தியப்பிரதேச வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பதவி விலக வேண்டும் என்று கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடக் கோரியும், வெள்ளி காலை இடதுசாரி உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட எம்.பி.க்களும், து.ராஜா உள்ளிட்ட சிபிஐ எம்.பிக்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்

No comments: