Sunday 30 August 2015

செப்டம்பர்-2, வேலைநிறுத்தத்தை நோக்கி! . . .

நம்பினார் கெடுவதில்லைமீண்டும் ஒருமுறைபொய்த்துப் போனது.மன்மோகன் பாராட்டிய வார்த்தைகளில்மோடி உற்சாகம். முதலாளிகள் கொண்டாட்டம்.காட்சி மாறாத ஆட்சி மாற்றம்.சுதந்திர தின உரையில் அடிமைகளின் வார்த்தைகளாய்...நிலம் பறிப்பு... தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்.மேக் இன் இந்தியா கூடாரத்திற்குள்...பரங்கியரின் ஆதிக்கம்.நினைவில் வந்து போகும் வரலாறுஒடுக்கப்பட்டது சிப்பாய் புரட்சி..சிலமாதங்களில்..சவக்குழியில் முடிந்ததுகோட்டைகளின் கலகம்..தூக்கு மேடைகளில் முடிந்ததுபாளையக்காரர்களின் போர்….ஆனாலும் அடங்கவில்லை விடுதலை வேட்கைஆதிவாசிகளின் கலகம்... விவசாயிகள் ஏந்திய ஆயுதம்...தொழிலாளர்களின் கிளர்ச்சி... மாலுமிகளின் போர்...…
இளைஞர்களின் எழுச்சிஎங்கும்ஒரே முழக்கம் விடுதலை.அஸ்தமமானது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்போர்களில்லை இப்போது காலனியாதிக்கம் இல்லை. ஆனாலும் ஒப்படைக்கிறோம் நிலத்தைதாரைவார்க்கிறோம் தண்ணீரைபாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரயில்வேஅனைத்தும் அந்நியர் கையில்அதன் பெயர் மேக் இன் இந்தியா...கேஸ் மான்யம் வேண்டாம்நீ சிறந்த குடிமகன்இடஒதுக்கீடு வேண்டாம்நீ இந்துத்துவாவின் தலைமகன்எதிர்த்து விட்டாலோநீ அன்னியன்.நவகாலனியாதிக்கத்திற்காகமோடியின் புதிய உற்பத்திகள்.வளர்ச்சியின் வரப்பிரசாதம்...விவசாயி தூக்குக் கயிறுடனும்...டீ விற்றவர் 10 லட்சம் ரூபாய் சட்டையுடனும்எல்லாம் அதானிகளின் செயல்நம்புங்கள் வளர்ச்சி... வளர்ச்சி...காந்தியும் இயேசுவும் சொன்னதாகஆசிரியர் சொன்னார்...ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு எனமாணவர் கேட்டார்...அடித்த பின் சவப்பெட்டியைக் காட்டினால் என்ன செய்ய?பொறுமையாய் சொன்னார்புதிய ஆசிரியர் போராடு என்று...நடந்து சென்ற விவசாயி சொன்னார் அதுதான் உன் வரலாறு என்று...தெருமுனையில் விளம்பரம் சொன்னதுதொழிற்சங்கம் வழிகாட்டுவதாகவெற்றிக்கான பயணம்வேலைநிறுத்தம் நோக்கி. . . 

No comments: