Friday 21 August 2015

அஞ்சல் அட்டை இயக்கத்தை உடனடியாக முடித்திடுக...

அருமைத் தோழர்களே ! நமது BSNL புத்தாக்கத்திற்குஅஞ்சல் அட்டை இயக்கத்தை நடத்த வேண்டுமென நமது அகில இந்திய FORUM அறைகூவல் விடுத்திருந்தது. நமது மதுரை மாவட்டத்தில் நாம் கடந்த 12.08.15 அன்று எழுச்சியுடன் துவக்கினோம். ஆகவே அப்பணியை அனைத்து கிளைகளும் தாமதமின்றி உடனடியாக விரைந்து முடித்திட வேண்டுமாய் மாநில, மாவட்ட சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.
அஞ்சல் அட்டை இயக்கத்தை உடனடியாக முடித்திடுக...நினைவூட்டல் ...
நமது BSNL புனரமைக்க "அஞ்சல் அட்டை" அனுப்பவும்...
அருமைத்தோழர்களே! !   26.06.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவு அடிப்படையில், BSNLநிறுவனத்தை புனரமைக்க ஒவ்வொரு ஊழியரும், மத்திய தொலை தொடர்பு அமைசருக்குகீழ் கண்ட வாசகத்தை  எழுதி, தபால் கார்டு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது 
“Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL.”
Address of the Minister:
Shri Ravi Shankar Prasad,
Minister of Communications & IT,
Sanchar Bhawan, 20, Ashoka Road,
New Delhi 110001
இவ் வியக்கத்தை BSNL உள்ள அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள்,  தங்கள் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு,பெயர், பதவி, பணிபுரியும் இடம், மாவட்டம் உள்ளிட்ட தகவல் களை  குறிப்பிட்டுதபாலில் அனுப்ப வேண்டும்.   
தோழர்களே ! ஆகஸ்ட் இம் மாதம் 10ம் தேதி துவங்கி, 22ம் தேதிக்குள் "அஞ்சல் அட்டை அனுப்பும்இயக்கம்நடத்தி முடிக்கபடவேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. எனவே,கிளை செயலர்கள் முன் முயற்ச்சி எடுத்து, கிளையில் உள்ள FORUM தலைவர்களுடன் சென்று, அனைத்து அதிகாரிகள்,ஊழியர்
களையும் சந்தித்து இயக்கத்தை வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு 
கொள்கிறோம்
---என்றும் தோழமையுடன்,
 S .சூரியன்,
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர் BSNLEU.

No comments: