Wednesday 26 August 2015

25.08.15 நமது இயக்கம் குறித்து பத்திரிக்கையில் . . .

மதுரை: பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். செய்யும் பணித்தன்மைக்கேற்ப சம்பளம் வழங்கவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்முன்னதாக நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மதுரைமாவட்டத் தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன், என்.சோனைமுத்து, ஆர்.முனியசாமி, கே.அந்தோணிசாமி, சி.பழனிச்சாமி, எஸ்.மாயாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை, விருதுநகர், காரைக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பிஎஸ்என்எல் உயரதிகாரியிடம் வழங்கினர்.

No comments: