Thursday 13 August 2015

நமது BSNLEU சங்கத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே ! நமது G.M (Dev) கிளைச் சங்கத்தின் தலைவர் தோழர்.T.ஈஸ்வரனின் அன்புப் புதல்வர்,E.விக்னேஷ் குமார், சுதந்திர தினத்தை முன் னிட்டு இந்திய தலைவர்களை கலை வடிவத்தில் ஓவிய கண்காட்சியாக, மதுரை காந்தி மீயுசியத்தில் வைத்துள்ளார். அவரது ஓவியம் மிகவும் உயிரோட்டமாக, தத்துருவமாக உள்ளது. அவரது கலை மேலும், மேலும் வளர நமது BSNLEU சங்கத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்... இதேபோன்று கடந்தாண்டும் ஓவிய கண்காட்சியை படைத்ததில்,E. விக்னேஷ் குமார் பல பாராட்டுக்களும் , பட்டயமும், பரிசும் பெற்றார் என்பதை  இத் தருணத்தில் நினனைவு கொள்கிறோம். நல்ல ஒரு படைப்பை நாமும் கண்டு களித்தோம் என்ற மன மகிழ்ச்சி நமக்கு நிறைவாக உள்ளது.
E.விக்னேஷ் குமார், மென்மேலும் வளர வாழ்த்தும்,எஸ். சூரியன் D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா