ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான விளக்க மனுவை விசாரிக்க வேண்டும் என்ற தமிழகஅரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiL9xiayhcKC03SGtcMPSoz6O1cZPuQPfKp5g6k5QOXwVMpleo0umxneyi6CMVWIZgfsfcONMTxV9xb1wxtpn-C5lJefFwKn6tzSliUiVU24r_Kvtmhh-sYL0UuR0Jl7XtXWXfiKRetcw/s1600/pe.shanmugam.jpg)
கர்நாடகா எதிர்ப்பால் நிராகரிப்பு:காவிரி நடுவர் மன்ற விசாரணையின்போது, கர்நாடக அரசின் எதிர்ப்பின் காரணமாகவே, தமிழக அரசின்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தாக புதுவை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நம்பியார் தெரிவித் துள்ளார்.இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான விளக்க மனுக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தான், நடுவர் மன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கர்நாடக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஏமாற்றமளிக்கிறது: பெ.சண்முகம்:காவிரி நடுவர்மன்றத்தின் நிராகரிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததன் விளைவாக, உரிய தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் குறுவை சாகுபடியும், சம்பாவும் காய்ந்துபோகும் நிலைமை தொடர்கிறது. இந்நிலையில், காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்ற நிலையில், உச்சநீதிமன்றத் தின் தடையுத்தரவு ஏதும் இதற்கு இல்லை என்ற நிலையிலும் கூட நடுவர் மன்றம் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்திருப்பது துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment