
1.BSNL & MTNL இணைப்பை பொறுத்தவரை,MTNL நிறுவனத்தின் பங்குகள் விலக்கபட்ட பிரச்னை , அந்த நிறுவனத்தின் கடன் சுமை , மற்றும் HR பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இணைப்பை ஏற்று கொள்ள முடியாது .
2. நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்காக கூட்டு போராட்ட குழு சார்பாக 07-08-2014 அன்று நடைபெற உள்ள ஆர்பாட்டத்தை பேட்ஜ் அணிந்து மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் மிகுந்த சக்தியுடன் நடத்த வேண்டும் . JAC அமைப்பை மாநில மற்றும் மாவட்ட அளவில் உருவாக்கி அனைத்து
NON EXECUTIVE சங்கங்களை அதில் இணைத்து வலிமைப்படுத்தவேண்டும் .
3.புதிய தாராளமய கொள்கை மற்றும் வகுப்பு நல்லிணக்கம் மற்றும் 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஒரு சில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றதை மத்திய செயலக கூட்டம் பாராட்டியது . இம் முயற்சி மாவட்ட மட்டங்களிலும் தொடரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
4. ஸ்டோர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை விஷயமாக மாநில செயலர்கள் மாவட்ட செயலர்களிடம் விபரங்களை சேகரித்து அதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அதன் நகலை மத்திய சங்கத்திடம் சமர்பிக்க வேண்டும்.
5. நமது அனைத்திந்திய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் மத்திய சங்கத்தால் அனுமதிக்கப்பட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
6. ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி BSNL காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனம்
உருவாக்கப்படாத மாநிலங்களில் உடனடியாக அதை உருவாக்க வேண்டும் .
7. அக்டோபர் 3 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்தை வேலையின்மை எதிர்ப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் .
8. டிசம்பர் 11 ஆம் தேதி தொழிலாளி
வர்க்கத்தின் தலைவர் தோழர் K.G. போஸ்.அவர்களின் நினைவு நாளை பொருத்தமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும் .
9. ஏப்ரல் 7,8 தேதிகளில் டெல்லியில் K .G .போஸ் நினைவு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற தொழிற்சங்க வகுப்பு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது என அதில் பங்கேற்ற அனைவரும் கூறியதை மத்திய செயலக கூட்டம் நினைவு கூர்ந்த்து .
No comments:
Post a Comment