Wednesday 16 July 2014

உற்சக பெருக்குடன் நடந்த மதுரை-SDOT கிளை மாநாடு . . .

அருமைத் தோழர்களே! 15.07.14 அன்று மாலை 6 மணிக்கு மதுரை வடக்கு LMR-ல், தோழர்.எஸ். பவகத் சிங்கம் கிளைத் தலைவரின் சீரிய தலைமையில் மிக மிக  உற்சக பெருக்குடன்  மதுரை  SDOT கிளையின் 7 வது  மாநாடு சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் 2 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மிகவும் சிறப்பம்சமாகும்.மாநாட்டின் அஞ்சலி உரையை தோழர்.கே.பாலச்சந்திரன் நிகழ்த்தினார். அதன் பின் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கிளைச் செயலர், தோழர்.எ.நெடுஞ்சழியன் பேசினார்.
கிளை மாநாட்டினை  துவக்கிவைத்து , மாவட்டச் செயலர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார்.
அதன் பிறகு ஆய்படுபொருளான, ஆண்டறிக்கை, வரவு-செலவு, அமைப்பு நிலை, புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவை முறையே  நடந்தேறியது. மாநாட்டில் வரும் ஆண்டிற்கான புதிய 15 நிர்வாகிகளில்தலைவர்,செயலர்,பொருளர் முறையே, தோழர்கள்,எஸ். பகவத் சிங்கம், எம்.முருகேஷ் பாபு, ஜி.காந்தி ராஜன் ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
 புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகளும்,கிளைச்செயலர்களுமான,தோழர்கள். எஸ். மானுவேல்பால்ராஜ், எஸ். மாயாண்டி, ஜி.கே.வெங்கடேசன், எஸ். ராமலிங்கம், எஸ். சாத்தாவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டில் சிறப்பான பங்கேற்பு, நல்ல உணவு, நினைவு பரிசு இப்படி பல்வேறு சிறப்புகளை செய்திருந்த தோழர். நெடுஞ்செழியன் செயல்பாட்டுக்கு  நமது சபாஸ்....
இறுதியாக தோழர்.ஜி.காந்தி ராஜன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நமது மாவட்டசங்கத்தின் வாழ்த்துக்கள்.




No comments: