Tuesday 29 July 2014

காமன்வெல்த் - தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 20-வது காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் சதீஷ்குமார் தங்கம்வென்றுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சதீஷ்குமார் பங்கேற்ற முதல் காமன்வெல்த் போட்டியிலேயே தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும். மத்திய அரசும், மாநில அரசும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களை உற்சாகமூட்டி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால், ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.

No comments: