Tuesday 29 July 2014

BSNL ஓய்வூதியர் மாநில மாநாடு : வரவேற்புக்குழு அமைப்பு

அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கம், தமிழ் மாநிலச்சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில்...அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் .கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ். அருணாசலம் பேசினார்.சங்கத்தின் தமிழ் மாநில 4வது மாநாட்டை ஆகஸ்ட் 13,14 ஆகிய நாட்களில் திருநெல்வேலி சங்கீத சபாவில் சிறப்பாக நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுப் பணிகளுக்காக முன்னாள் தொலைபேசி ஊழியரும் புரொபஸனல் கூரியர் நிர்வாக இயக்குனருமான எம்.எஸ். அகமது மீரான் தலைமையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.சம்மனசு, எஸ். அருணாசலம், டி. ஆவுடைநாயகம் ஆகியோர் முறையே செயல் தலைவர், செயலர், பொருளாளராகவும் .கனகராஜ், பி.ரெகுபதி, .மியாகான், பி. பழனிவேல் ஆகியோர் உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 50 ஓய்வூதியர்களை உறுப்பினராகக் கொண்ட 9 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.    ---தீக்கதிர் 

No comments: