Sunday 27 July 2014

26.07.14 வெற்றிகரமாக நடந்த வேடசெந்தூர்கிளை மாநாடு...


26.07.14 சனிக் கிழமையன்று மாலை வேடசெந்தூர் கிளையின் மாநாடு தலைவர் தோழர்.முருகேசன் தலைமையில் மிகவும் சீரும்,சிறப்புமாக நடைபெற்றது. நமது BSNLEU சங்கக்கொடியை தோழர். ஜேவியர் பால்ராஜ்  விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டில் அஞ்சலி யுரையை தோழியர்.ஜெயலட்சுமி நிகழ்த்தினார். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கிளைச் செயலர் தோழர்.சௌந்தர் ராஜ் உரைநிகழ்த்தினார்.மாநாட்டில் 3 பெண்கள் உட்பட 35 தோழர்கள், குறிப்பாக கிளை உறுப்பினர்கள் 100 சதம் கலந்து கொண்டது என்பது மிக,மிக சிறப்பம்சமாகும். 
மாநாட்டினை துவக்கிவைத்து, இன்றைய சூழ்நிலை,நமது மத்திய, மாநில, மாவட்ட, கிளை சங்கங்களின் செயல்பாடு, நாம் சந்திக்க இருக்கிற போராட்டங்கள் மற்றும் BJP அரசின் மக்கள்,தொழிலாளர் விரோத நிலை பாட்டிற்கு  எதிராக  தொழிலாளர் வர்க்கம் அணிதிரள வேண்டிய அவசிய அவசர உடனடிக்கடமை ஆகியவை குறித்தும் விளக்கி மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன் உரையாற்றினார்.
அதன்பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு, அமைப்பு நிலை விவாதம் , புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவை முறையாக நடந்தேறியது. தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், முருகேசன், சௌந்தர்ராஜ், நேவீஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்   புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் , சுமதி, வைத்திலிங்க பூபதி, பரிமள ரெங்கராஜ், கிளைச் செயலர்கள், ஜோதிநாதன், குருசாமி, சுப்ரமணியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்,எஸ்.ஜான் போர்ஜியா, சி. செல்வின் சத்தியராஜ் ஆகிய இருவரும் சிறப்புரை நிகழத்தினார்கள்.
இறுதியாக தோழியர்.நேவீஸ் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. ஒரு சிறிய கிளை மாநாட்டிற்கு ஆன ஏற்பாடு, பங்கேற்பு அனைத்தும் சிறப்பாக செய்து இருந்ததை மதுரை மாவட்ட சங்கம், சபாஷ் சொல்லி  உளமார பாராட்டுவதுடன், புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறது.
 

 

 

 

 

No comments: