Thursday 24 July 2014

மதுரை,மருத்துவர் க.செல்வராஜ் எழுதிய “ நரிக் கொம்பு’’

மதுரை,மருத்துவர் .செல்வராஜ் எழுதியநரிக் கொம்பு’’ நாடக நூலுக்கு எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக சிறந்த நாடக நூலுக்கான விருது வழங்கப் பட உள்ளது.மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும்செந்தமிழ் அறக்கட்டளைஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. 2013ம் வருடத்திற்கான விருது களை அறக்கட்டளை அறிவித்துள்ளது. சிறந்த நாவலாக நிஜந்தன் எழுதியஎன் பெயர்நாவ லும், ஏக்நாத் எழுதியகெடை காடுநாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நூலுக்கான விருது மருத்துவர் . செல்வராஜ் எழுதியநரிக் கொம்புநூலுக்கு வழங்கப் படுகிறது.சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதியபெண் வழிபாடுநூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதியஜெயந்தி சங்கர்’’ சிறுகதைகள் என்கிறநூலுக்கும் வழங்கப்படு கிறது.
சிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதியதோட்டக் காட்டீதொகுப்பிற்கும், ஜான் சுந்தர் எழுதியசொந்த ரயில் காரிதொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விரு திற்காக திலகபாமா வின் கவிதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் தேதிசனிக்கிழமை, மாலை சென்னை தியாகராய நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், மாலை 5.30 மணிக்கு, ஞாநியின் இயக்கத்தில் ஜெயந்தன் எழுதியமனுஷா மனுஷாநாடகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

No comments: