Monday 13 October 2014

திருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் . . .

அருமைத் தோழர்களே! திருச்சியில் கடந்த அக்டோபர் 11 , 12 & 13 ஆகிய மூன்று நாட்கள்  மிகவும் கம்பீரகமாக நடைபெற்ற நமது BSNLEU தமிழ்  மாநில மாநாட்டில்  ஒருமனதாக கீழ்கண்ட நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் . . .
நடைபெற்ற மாநில மாநாட்டில் நமது மதுரை மாவட்டத்திலிருந்து  முதல் நாள் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டத் தோழர்கள் கலந்துகொண்டதும், அதில் 18 பெண்கள் பங்கேற்றதும், 2வது மற்றும் 3வது நாட்கள் மாநாட்டில் 5 பெண்கள் உட்பட 43 சார்பாளர்கள் பங்கேற்றதும் மிக, மிக பாராட்டுக்குரிய விசயமாகும். மாநாட்டில் நடைபெற்ற விவாதத்தில் நமது மாவட்ட சங்கம் சார்பாக தோழியர்.N.ஈஸ்வரி,-GM(O) தோழர். P.சந்திரசேகர்,  -BOK, தோழர்.பரிமள ரெங்கராஜ்,DDG ஆகியோர் சிறப்பாக தங்களது கருத்துக் களை பதிவு செய்தனர். மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் நமது மதுரை மாவட்டத்திற்கு தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, சி . செல்வின் சத்தியராஜ் , பி .சந்திரசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டத்திற்கு நன்றியையும், புதிய நிர்வாகிகள் பனி சிறக்க வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்...தோழமையுடன், எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

No comments: