Sunday 23 November 2014

கண்ணீர் . . . அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்...

தோழர்களே ! அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த வழக்கறிஞருமான தோழர்.R.கல்யாணசுந்தரம்அவர்கள் 22.11.2014 சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் மதுரையில் இயற்கை எய்தினார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.நமது பகுதியில் ஏற்பட்ட வழக்குகளில் மிக நேர்த்தியாக வழிகாட்டிய தோழர் ஆர்.கல்யாணசுந்தரமாகும்.  அன்னாருக்கு, நமது BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் தோழர்.எம்.சௌந்தர், இந்நாள் மாவட்டத் தலைவர் தோழர்.C.செல்வின்  சத்தியராஜ், மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நமது கண்ணீர் . . .  அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்