Monday 24 November 2014

ஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயரவும்...

அன்பு நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களே !வணக்கம்.... ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்சார்பில், தஞ்சையில்6 ஆம் ஆண்டுரோட்டரி புத்தகத் திருவிழாகடந்த 14.11.14 முதல் 23.11.14வரைசிறப்புடன் நடைபெற்றதில் கடந்த 16.11.2014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற படைப்பாளிகளுக்குப் பாராட்டு  விழாவில், விழாக் குழுவினர்,வலைப் பூவில் வலம் வருகின்றமைக்காக,தங்களுக்கு  ஒரு விருது வழங்கியது கண்டு நானும்  மகிழ்ந்தேன் முன்பே       அறிந்திருந்தால் நானும் நேரில் வந்து வாழ்த்தி இருப்பேன்.
திரு.மேளாள் அமைச்சர், முத்தமிழ் மன்றத் தலைவர் திருமிகு. சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின்தலைமையில் நடைபெற்ற அவ் விழாவில், மத்திய நிதித் துறை, மேனாள் இணை அமைச்சர்திருமிகு எஸ்.எஸ்.பழனிமாணிக்ம் அவர்கள்,மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினை தங்களுக்கு  வழங்கியுள்ளது கண்டு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயர எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 
--என்றும் நட்புடன், மதுரை சூரியன். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் அன்பு கண்டு
நெகிழ்து போய் நிற்கின்றேன் ஐயா
மிக்க நன்றி ஐயா