Sunday 8 December 2013

07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...

அருமைத்தோழர்களே! நமது மாவட்டசங்கத்தின் செயற்குழு கூட்டம் 7வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய அதே திண்டுக்கல் நகரில் மிக மிக உற்சாகமாக நடைபெற்றது என்பது குறிப்பிட தகுந்தது.செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் தலைமைதாங்கினார்.செயற்குழுவில் 7 பெண்கள் உட்பட 100  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.அஞ்சலி உரையை தோழியர்.S.M. புஷ்ப்பராணி நிகழ்த்தினார்,தோழர்.K.S. ஆரோக்கியம் வரவேற்புரை நல்கினார்,செயற்குழுவை மாநில துணைத்தலைவர் தோழர்.S. ஜான் போர்சியா துவக்கிவைத்து உரையாற்றினார்.
செயற்குழுவின் ஆய்படுபொருளின் மீதான அறிமுகவுரையை மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் நிகழ்த்தினார்.அதன்பின் முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி தோழியர்.ZAC. அருணோதயம் JAO, அணைவரும் பாராட்டும் வண்ணம் வாழ்த்துரை வழங்கினார்.அதற்க்கு பிறகு 7வது மாவட்ட மாநாட்டை திண்டுக்கல் மண்ணில் சீரும்,சிறப்புமாக நடத்திட பணியாற்றிய அணைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.அதன்பின் மாவட்டபொருளர் தோழர்.S.மாயாண்டி மாவட்டசெயற்குழு ஆய்விற்கும்,ஏற்பிற்க்குமான வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார்.செயற்குழு உறுப்பினர்களால் ஓரிரு விளக்கங்கள் கோரிப் பெறப்பட்டு அதன்பின் வரவு-செலவு கணக்கு ஏகமனதாக ஏற்க்கப்பட்டு தலைவர் செயற்குழு ஒப்புதல் பெற்று அறிவித்தார்.
உணவு இடைவேளைக்குபின் தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 27 பேர் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர்.விவாதத்தில் வந்த கருத்துக்களைஉள்ளடக்கி   மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் தொகுப்புரை வழங்கினார்.திண்டுக்கல் புறநகர் கிளச்செயலர் தோழர்.A.குருசாமி நன்றிஉரை கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.

No comments: