Sunday 29 December 2013

28.12.2013 - நடந்தவை. . . .

அருமைத்தோழர்.T.S.ராஜன் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம்.
அருமைத் தோழர்களே!
அனைவராலும்,அன்பாக அழைக்கப்பட்ட அருமைத் தோழர்.TSR அவர்கள் 28.12.2013 மறைவை ஒட்டி மதுரை G.Mஅலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு BSNLEU + NFTE சங்கங்கள் சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு,NFTEசங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர்.K.முருகேசன் தலைமை தாங்கினார்,அஞ்சலி உரையாக NFTE  மாவட்டசெயலர், தோழர். S.சிவகுருநாதன், SNEA மாநில உதவிச்செயலர், தோழர்.S. கணேசன். ஓய்வு பெற்றோர்  நலச்சங்க மாவட்டசெயலர், தோழர்.G.R.தர்மராஜன்,  நமது   BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் ஆகியோர் மறைந்த தோழர்.TSR,தொழிற்சங்கத்தின் மீதும்,தான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கை மீதும் எத்தகய பற்றும்,பிடிப்பும் கொண்டு,ஊழியர்களுக்காக உறுதியோடு செயல்பட்டார் என்பதை நினைவு கூர்ந்தனர். தொழிற் சங்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு,1965 தந்தி பகுதி  போராட்டம், 1968 நாடுதழுவிய வேலைநிறுத்தம் ஆகியவற்றில் நிர்வாகம் தொடுத்த பழிவாங்கல் நடவடிக்கைகளை முழுமனதோடு ஏற்றுகொண்ட தோழர்.TSR அவர்களின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments: