Monday 9 December 2013

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .

மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: சோனியா காந்தி கருத்து

உண்மையில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதால்தான் இத்தகைய முடிவைத் தந்ததாக, 4 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக தொடரந்து மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி, பொது துறைகளை சூறையாடி ,மானியங்களை வெட்டி ஏழை மக்களை இன்னல்படுத்தி,தினம்தோறும் டீசல், பெட்ரோல் விலைகளை ஏற்றி வறுமை கோட்டிற்கு புது வியாக்கியானம் செய்த மக்கள் விரோத சக்திகளுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்.
ஆனால் நாட்டு மக்களை மதவாத அடிப்படையில் பிளவு படுத்தும் சக்திகள் மீண்டு எழுவது நாட்டிற்கும் ,மக்களுக்கும் நல்லதல்ல என்பதை 4 மாநில தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன.மாற்று கொள்கைகளை முன் வைத்து மாற்றம் ஏற்பட நெடுந்தூரம்செல்ல வேண்டியதுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன

1 comment:

R.GOPINATH said...

The Cartoon picture collection is Very Good.