Sunday 21 December 2014

கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந்தம்...

டிசம்பர் 25 வாஜ்பாய் பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் அமைச்சகங்கள் அறிவித்துள்ளன. எனவே அன்றைய தினம் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் அலுவலங்களுக்கு வர வேண்டும் என்று மத்தியஅரசு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக டிசம்பர் 25 அன்று அனைத்துப் பள்ளிகளும் நல்லாட்சிநாள் கொண்டாடவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அதனை அரசு விலக்கி கொள்வதாக அறிவித்தது.தற்போது பல மத்திய அமைச்சகங்கள் அன்றைய தினம் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித் திருக்கின்றன. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் அன்றைய தினத்தைபிரதான் மந்திரி கிராம சாலை திட்ட தினம்’’-ஆக அனுசரிப்பார்கள் என்றும், 2000ல் வாஜ்பாயால் துவக்கிவைக்கப்பட்ட கிராமச்சாலைகள் திட்டத்தின் 15ஆம் ஆண்டு விழா அன்றைய தினம் கொண்டாடப்படும் என்றும் கூறப்படுகிறது.டிசம்பர் 25 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கிராம சாலைகள் தொடர்பான புத்தகம் ஒன்றை வெளியிடுகிறார் என்று அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தனது அமைச்சகம் 25ம் தேதியை நல்ல நிர்வாகத்திற்கான நாளாக கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அன்றைய நாளில்அமைப்பு ரீதியான மற்றும்முறைசாரா தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த இருக்கிறாராம். மத்திய அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் இணை அமைச்சர் மகேஷ் சர்மா வரும் 25ம் தேதியன்று புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாக கூறியுள்ளார். மத்திய அரசின் இளைஞர் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வரும் 25ம் தேதியன்று நேரு யுவகேந்திர திட்டத்தின் கீழ் 270000 இளைஞர் கிளப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் 25ம் தேதி மாரத்தான் போட்டி, ரத்ததானமுகாம், கண்சிகிச்சை முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகளில் M.P., MLAக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அமைச்சர்கள், M.P.க்கள், MLAக்கள் கிறிஸ்துமஸ் தினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விடுமுறையில் பணிக்கு வரவேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை இருட்டடிப்பு செய்யும் இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள மனிதஉரிமை அமைப்புகள், மதச்சார்பின்மை அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

No comments: