Tuesday 23 December 2014

22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் உள்ள 3 ரெவன்யு மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று இடத்திலும் நமது FORUMசார்பாக கையெழுத்து இயக்கங்களை துவக்குவது என்ற அடிப்படையில் கடந்த 11.12.2014 அன்று மதுரை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தோழர்.R.அண்ணாதுரை MLA அவர்களைவைத்து கையெழுத்தை துவக்கினோம். அதற்கடுத்து கடந்த 15.12.2014 அன்று  திண்டுக்கல்லில் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தோழர்.K.பாலபாரதி MLA அவர்களைவைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்கினோம், அதன்பின் 22.12.2014 அன்று பெரியகுளத்திலும் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தோழர்.A.லாசர் MLAஅவர்களை வைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்கயுள்ளோம் ...
பெரியகுளத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்க துவக்க நிகழ்சிக்கு NFTEசங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் .M. லட்சம் அவர்கள்  தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தோழர்.T.K. சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.கையெழுத்து இயக்க  நிகழ்சியை துவக்கி  வைத்து BSNLEUமாவட்டச் செயலரும், FORUMகன்வீனருமான S. சூரியன் தனது உரையில், இயக்கத்தின் நோக்கத்தை விளக்கியும், மக்கள் சொத்தான BSNLநிறுவனத்தை பாதுகாக்க இந்திய நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் நடத்துகின்ற தேச பக்த போரட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.அதன்பின் FORUMஇயக்கத்தின் கோரிக்கைகளை விளக்கியும், BSNLஉள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கொள்ளைக்கு மத்திய BJP அரசு திட்டமிடுவதையும் எடுத்தக் கூறி BSNLEUசங்கத்தின் மாநில அமைப்பு செயலர் தோழர். P. சந்திர சேகர், SNEAசங்கத்தின் நிர்வாகி தோழர்.V.தமிழராசன்SDE, TEPUசங்கத்தின் நிர்வாகி தோழர்.R. ரவீந்திரன்JTO, NFTEசங்கத்தின் கிளைச் செயலர் தோழர். கல்யாணி, BSNLEUசங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர்.S. ஜான் போர்ஜியா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.நிகழ்சியில் முதல் கையெழுத்து இட்டு துவக்கிவைத்து பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மரியாதைகுரிய தோழர் A. லாசர்  அவர்கள் தனது உரையில், இன்று உள்ள மத்திய BJPஅரசு, கடந்த காங்கிரஸ் அரசு கடைபிடித்த அதே மக்கள் விரோத, தேச விரோத, பொதுத்துறை விரோத கொள்கைகளைத்தான், முன்பிலும் படு வேகமாக கடைபிடிக்கிறது என்றும், கூடுதலாக மத மோதலை உருவாக்க கூடிய செயல்களிலும் மத்திய BJPஅரசு இறங்கியுள்ளது. இத்தகைய படு மோசமான அரசின் கொள்கைகளுக்கு எதிராக BSNLஊழியர்களும், அதிகாரிகளும் நடத்துகின்ற இந்த தேச பக்த போராட்டத்தை பாராட்டுவதாகவும், தான் சார்ந்துள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சி  எப்போதும் போல் உங்களது போராட்டத்தை முழுமையாக  ஆதரித்து உங்களுடன் நிற்கும் என எழுச்சி உரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் அழகர்சாமி நன்றி  கூறி முடித்து வைத்தார். ...என்றும் தோழமையுடன்,எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கையெழுத்து இயக்கம் வெற்றி பெறட்டும்