Sunday 14 December 2014

டிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (1908-1987)

தோழர் பி.ஆர்ஒரு சகாப்தம்

தோழர் பி.ராமமூர்த்தி ஒரு சகாப்தம்தேச விடுதலைக்கும்கம்யூனிஸஇயக்கத்துக்கும்தொழிற்சங்க இயக்கத்துக்கும்தேச முன்னேற்றத்துக்கும் அவர்ஆற்றிய சேவையை   அளவிட  முடியாதுநமது இருபதாம் நூற்றாண்டின்முற்பகுதியிலும்பிற்பகுதியிலும்நடைபெற்ற  முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொன் றிலும்தோழர் பி.ஆர்.வகித்த பங்கு சிறப்பானதாகும்.தோழர் பி.ஆர்தமிழ்நாடு மாத்திர மல்ல,அகில இந்தியத் தலைவராக விளங்கினார்அன்னிய ஆட்சியாளரும்காங்கிரஸ்ஆட்சியாளரும் தொடுத்த எத்தனையோசதிவழக்குகளை பி.ஆர்.சந்தித்தார்.எத்தனையோ சிறைக் கூடங்களில்  இன்னல் உற்றார்எத்தனையோ போராட்டங்களில் அடிபட்டார்.அவர் மீது போடப்பட்ட சதி வழக்கு களில் அவரே எதிர்வழக்காடிஆட்சியாளரின் சதித்திட்டங்களைத் தவிடுபொடியாக்கிவிடுதலை  பெற்றார்.தொழிலாளிகளின் கோரிக்கைகளை வகுப்பதிலும் அவற்றைஅடைவதற்கான போராட்ட  முறைகளைக் கூறுவதிலும்அப்போராட்டங்களுக்குத்தலைமை தாங்கிவெற்றி தேடிக் கொடுப்ப திலும் அவருக்கு நிகர் அவரே.நீதிமன்றங்களிலும்சட்டமன்றநாடாளுமன்றங்களிலும் உழைப்பாளர் உரிமைகளுக்காக புள்ளி விவரங்களுடனும் பி.ஆர்.நடத்திய வாதங்களை என்றுமேமறக்க முடியாது. நமது தேசத்தின்தொழில்கள் ஏகாதிபத்திய சூழ்ச்சி வலையில்மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதிலும்,
நமது நாட்டு விஞ்ஞானிகள்பொறியியல்வல்லுநர்கள் அறிவுச் செல்வத்தையெல்லாம்நமது  நாட்டுக்கே பயன்படுத்தவேண்டுமென்பதிலும் கூர்ந்து அக்கறை காட்டினார்.
பி.ஆரின் வாழ்க்கை வரலாறு,இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு.
தொழிலாளி வர்க்கமும்நடுத்தரவர்க்கங்களும்விவசாயிகளும்மாணவர்களும்
நடத்திய போராட்ட வரலாறு.அவரது லட்சியப் பாதையில் நாம் உறுதியோடு நடை
போட வேண்டும்அதுவேஅவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
BSNLEU மதுரை மாவட்ட சங்கம், அன்புத் தலைவர் தோழர்.பி.ஆர். அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறது.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் பி.இராமமூர்த்தி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்