Sunday 7 December 2014

5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...


Ø  05-12-2014 அன்று நடைபெற்ற போரம் கூட்டத்தில் நமது BSNL நிறுவன புத்தாக்கத்திற்கு ஆதரவாக...
Ø   பொது மக்களிடம் ஆதரவு கோரி 1 கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தைவரும்  
     11-12-2014 அன்று நடைபெற உள்ள கோரிக்கை தினம் மற்றும் ஆர்பாட்டம்
Ø  25-02-2015 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி அன்று மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களிடம் சமர்பிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .
Ø  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு  17-03-2015 தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது .காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவில் ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபட வேண்டும்  என போரம் முடிவு செய்துள்ளது
Ø  கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள்  அபிமன்யு ,பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங்தலைவர் ,தோழர் அனிமேஷ் மித்ரா,துணை தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.
Ø  கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
Ø  P L I கமிட்டி (போனஸ் )கூட்டம் 10-12-2014 அன்று நடைபெற உள்ளது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

முயற்சிகள் வெற்றி பெறட்டும் ஐயா

Ganesan , Dist vice President , Palani said...

தோழரே !
போரம் எடுக்கும் முடிவுகளின்படி முழுமையான போராட்டத்தை நடத்த வேண்டுமெனில் ' அண்டாவில் தண்ணீர் ஊற்றும் ' பல தோழர்களின் சுயநல நிலைபாட்டை மாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது !
ஒவ்வொரு வேலை நிறுத்ததின்போதும் எம்.சி கொடுக்கும் டாக்டர்கள் கல்லா கட்டும் அவலம் தொடருமானால் தலைவர்களின் உண்மையான, நேர்மையான சிந்தனைக்கும் , உழைப்பிற்கும் மதிப்பிலாமல் போய் விடும் !
எனவே , வங்கி ..காப்பீடு வேலை நிறுத்தங்கள் போல் முழுமையான வேலை நிறுத்தங்களை நாம் கட்டமைக்க வேண்டும் !....
தோழர் .கணேசன், மாவட்ட துணைத்தலைவர்.