Thursday 11 December 2014

11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . .

அருமைத் தோழர்களே ! நமது அகில இந்திய கூட்டு போராட்டகுழு (அதிகாரிகள் + ஊழியர் சங்கங்கள்) அறிவித்துள்ள நாடு தழுவிய இயக்கத்தின் ஒருபகுதியாக மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மிக மிக சக்தியாக 11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள்  பரட்டுக்குரியவையாகும்  . . .
சபாஷ் லெவல்4 வளாகம்.
மதுரையில் பல இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்ட கூட்டங்களில், மதுரை லெவல் 4 வளாகத்தில் நடை பெற்ற ஆர்பாட்டம் தான் மிக, மிக சக்தியாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர் என்பது சிறப்பம்சமாகும். இத் திரட்டலுக்கு முயற்சித்த அந்தப்பகுதிமுன்னனித் தோழர்கள் அனைவருக்கும் நமது மதுரை மாவட்ட FORUM சார்பாக வாழ்த்துக்களையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். லெவல்4 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு SNEA மாவட்டச் செயலர் தோழர்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார். AIBSNLEA மாநில நிர்வாகி தோழர்.எஸ். கருப்பையா, BSNLEUசார்பாக மாநில உதவிச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், TEPU சார்பாக தோழர்.வா. நேரு, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியாக FORUM கன்வீனர் தோழர்.எஸ்.சூரியன் நன்றியுரை நிகழ்த்தினார்.
வில்லாபுரம் : இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.சுரேஷ் குமார், SNEA தலைமை தாங்கினர். BSNLEU சார்பாக S.மானுவேல் பால்ராஜ், P.கிருபானந்தன்,NFTE சார்பாக ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
எல்லீஸ் நகர் : இங்கு நடைபெற்ற ஆர்பாட்ட கூட்டத்தில்BSNLEU சார்பாக தோழர்கள், எம். முருகேசன், ஆர், சண்முகவேல், NFTEசார்பாக தோழர்கள் கணேசன், மருது , SNEAசார்பாக தோழர்கள் விமலன், சுந்தரராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கீழ மாசி வீதி :  இங்கு நடைபெற்ற ஆர்பாட்ட கூட்டத்தில், BSNLEUதோழர். சுப்புராஜ் , தலைமை தாங்கினார்.  TEPUஅகில இந்திய நிர்வாகி தோழியர், D.மகேஸ்வரி , NFTE சார்பாக தோழர்.ராஜ்குமார் , BSNLEUசார்பாக தோழர்கள், K.N.செல்வன், N.உத்ரகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
பொது மேலாளர் அலுவலகம் : இங்கு நடைபெற்ற உணவு இடைவேளை ஆர்பாட்டத்தில்NFTE மாவட்டத் தலைவர்  தோழர்.கே. முருகேசன் தலைமை தாங்கினார். TEPUசார்பாக மாவட்டச் செயலர் தோழர்.N. முருகன், SNEAசார்பாக மாநில உதவிச் செயலர் தோழர். கணேசன்,  AIBSNLEAசார்பாக அகில இந்திய அட்வைசர், தோழர்.V,K. பரமசிவம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக FORUM கன்வீனர், எஸ். சூரியன் நன்றி கூறி முடித்து வைத்தார். 







1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எழுச்சி தொடரட்டும்
வெற்றி கிட்டட்டும்