Saturday 27 December 2014

26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .

அருமைத் தோழர்களே! BSNLலில் உள்ள ஊழியர் சங்கங்கள் + அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு (FORUM)சார்பாக இந்திய நாடு முழுமைக்கும்  "SAVE BSNL" என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய நாடு முழுவதும்  1 கோடி கையெழுத்தை பொதுமக்களிடம் பெறுவது  என்ற அகில இந்திய FORUM அறை கூவலுக்கினங்க, நாம் மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் கடந்த 11.12.2014 அன்று மதுரையில் மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர்.ஆர். அண்ணாதுரை,MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம். அதன்பின் 15.12.2014 அன்று திண்டுக்கலில் மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர். கே. பாலபாரதி MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம். அதற்கு பிறகு பெரியகுளத்தில் 22.12.2014 அன்று  மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர் எ. லாசர் ,MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம்.  
அதனை தொடர்ந்து தற்போது 26.12.2014 அன்று  மரியாதைக்குரிய பழனி நகர் மன்ற  தலைவர் திரு. ஆ. வேலுமணி அவர்களை வைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்க பதிவை ஏற்படுத்திய பழனி கிளையை  நமது மதுரை மாவட்டFORUMசார்பாக மனதார வாழ்த்துகிறோம். . . .நிகழ்ச்சிக்கு தோழர். அன்பழகன் தலைமை தாங்கினார். வந்திருந்த அனைவரையும் உரிய முறையில் வரவேற்று உரை நிகழ்த்தினார் மாவட்ட உதவித் தலைவர் தோழர்.கணேசன். அதன்பின்  "SAVE BSNL" என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுமுழுவதும்  1 கோடி கையெழுத்தை பொதுமக்களிடம் பெறுவதின் நோக்கம் குறித்து BSNLEU மாவட்ட செயலரும், FORUM கன்வீனருமான தோழர்.எஸ். சூரியன் விளக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து மரியாதைக்குரிய பழனி நகர் மன்ற  தலைவர் திரு. ஆ. வேலுமணி அவர்கள் முதல் கையெழுத்து இட்டு  இயக்கத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து தோழர்கள் சி . செல்வின் சத்தியராஜ், மாவட்ட தலைவர், எஸ். ஜான் போர்ஜியா, மாநில துணைத் தலைவர் கோரிக்கையை விளக்கி பேசினர்.இறுதியாக தோழர். கே. பழனிகுமார் நன்றிகூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பணி  நிறைவு பாராட்டு விழா 
கடந்த 33 மூன்று ஆண்டுகளாக பழனி துனைக்கோட்டம் கோரிக்கடவு தொலைபேசியகத்தில் பணியாற்றி 31.12.2014 அன்று பனி நிறைவு பெறும் அருமைத் தோழர் S.T.கோபாலகிருஷ்ணன், டெலிகாம் மெக்கானிக் அவர்களுக்கு நமது பழனிக் கிளை சார்பாக மிக விமர்சியாக பனி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோழர் S.T.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி எஸ். சூரியன் வாழ்த்துரை வழங்கினார். தோழர்.சி . செல்வின் சத்தியராஜ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, கே.மாரிமுத்து, சாது சிலுவைமணி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினர். இறுதியாக தோழர்.S.T. கோபால கிருஷ்ணன், ஏற்புரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது. 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் S.T.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பணிநிறைவு வாழ்வு செழிக்க சிறக்க வாழ்த்துவோம்