Thursday 12 March 2015

மார்ச் 12 - மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை துவங்கினார்.

மார்ச் 12ம் - இதே நாளில் மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்ற தண்டி யாத்திரையை துவங்கினார். உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்ட மாகும். 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்தமுழு விடுதலைஎன்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் போராட்ட இயக்க மாகும். மார்ச்சு 12, 1930 அன்று காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு ஆங்கிலேயர் விதித்த தடையை மீறி மகாத்மா காந்தியுடன் வழியெங்கிலும் பெருமளவு மக்கள் இணைந்து கொண்டனர் ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியை அடைந்து உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக உருவெடுத்து இலட்சக்கணக்கான இந்திய மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.

No comments: