Thursday 5 March 2015

டால்மியாவை வரவேற்க காக்க வைக்கப்பட்ட சிறுமிகள்.

கொல்கத்தா விமான நிலையத்தில் டால்மியாவை வரவேற்க 50 குழந்தைகள் நள்ளிரவு வரை காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொல்கத்தா விமான நிலையத்தில் செவ்வாயன்று நள்ளிரவு 11.30 மணி வரை பூங்கொத்துகளுடன் 50 பள்ளிக் குழந்தைகள் காத்திருந்தனர். அவர்கள் யாருக்காக காத்திருக்கின்றனர் என்பது தெரியாமல் அங்கிருந்தவர்கள் திகைத்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக ஜக் மோகன் டால்மியா தேர்ந்தெடுக் கப்பட்டதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தாவிற்கு வருவதால் அவரை வரவேற்க அவரது நண்பர் ஒருவர் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது கொல்கத்தா விமான நிலையத்திற்கு தனது நண்பரை வரவேற்க வந்த ஷஷந்த தஸ்வானி என்பவர் அங்கு நடந்தவற்றை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவுசெய்தார். இது குறித்து அவரது நண்பரான அரோராவும் இது காலனி ஆதிக்கத்தின் நீட்சி. நீங்கள் ஒரு கிரிக்கெட் நிர்வாகி. டால்மியா உங்கள் நண்பர் என்றால் நீங்கள் சென்று வரவேற்பளியுங்கள். ஆனால் எதற்காக குழந்தைகள் கட்டாயப்படுத்தி நள்ளிரவு வரை காத்திருக்க வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து தகவல் பரவியதையடுத்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் குழந்தை நல அமைப்பினர், சிறு மிகள் நள்ளிரவு வரை வரவேற்பிற்காக காக்க வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

No comments: