Wednesday 25 March 2015

24.03.15பழனி கிளையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே ! 24.03.15 செவ்வாய் கிழமை மாலை, பழனி தொலைபேசியகத்தில் தோழர் அன்பழகன் தலைமையில் கிளையின்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது ...
கிளை பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, பழனி பகுதியில் ஒரு சில தோழர்களின் இட மாற்றல் குறித்த முழுமையான விளக்கம் தேவை என்ற அடிப்படையிலும். எதிர் வரும் ஏப்ரல் 21 & 22 தேதிகளில் இந்திய நாடு முழுவதும் BSNL நிறுவனத்தில் அடிப்படை பணியை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் முதற்கொண்டு, துணை பொது மேலாளர் வரை நடத்தவுள்ள வேலைநிறுத்தம், அதற்க்கு முன்பாக மீண்டும்"SAVE BSNL" கையெழுத்து இயக்கம் குறித்து ஆயபடுபொருள் இருந்தது.  
கிளைச் செயலர் தோழர்.கே.பழனிகுமார் ஆய்படுபொருள் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.அதன்பின் மாவட்டச்செயலர் தோழர்.எஸ். சூரியன் கிளை ஊறுப்பினர்கள் மத்தியில் எழுந்திருந்த வினாக்களுக்கு முறையான, முழுமையான விளக்கங்களை கொடுத்ததை கிளைபொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.ஊழியர்கள் மத்தியில்  தவறுதலாக  புரிந்திருந்த  கருத்தை தோழர்கள் மாற்றிக்கொண்டனர்.
கையெழுத்து இயக்கம், எப்ரல் 21&22 வேலைநிறுத்தம் அவசியம் குறித்து மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், சூரியன், ஜான்போர்ஜியா, கணேசன்,  வைத்திலிங்க பூபதி ஆகியோர் எடுத்துரைத்தனர். எதிர்வரும் ஏப்ரல் 2 அல்லது 3 தேதியன்று பழநிநகர் முழுவதும் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்து கையெழுத்து இயக்கம் பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தோழர்.எ .சிவப்பிரகாசம் நன்றி கூற பொதுக்குழு இனிதே முடிந்தது.





No comments: