Wednesday 11 March 2015

பெருமை மிகு பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை தொலைதொடர் மாவட்டத்திலேயே அதிக உறுப்பினர்களையும்,அதில்   அதிக பெண் உறுப்பினர்களையும் கொண்டு, மகளீர் செயலராக தொடர்ந்து திறம்பட செயலாற்றி வரும்  நமது BSNLEU பெருமை மிகு பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு 10.03.15 செவ்வாய் அன்று  மூத்த தோழர் எம். பொன்னுசாமி அவர்கள் கொடியேற்றத்துடன், ஏராளமான தோழியர்கள், தோழர்கள் பங்கேற்புடன் தோழர்.எல்.செல்வராஜன் தலைமையில் மிக மிக சிறப்புடன் நடைபெற்றது.... 
தோழர்.எஸ்.என்.எம். சையது அலியர்ஷா, மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். அஞ்சலிஉரையை தோழியர்.எஸ்.எம். புஷ்பராணி நிகழ்த்தினார். கிளைச்செயலர் தோழியர்.என்.ஈஸ்வரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். தோழியர். எஸ்.எம். புஷ்பராணி வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார்.  ஆண்டறிக்கை, வரவு-செலவு ஆய்விற்குப் பின் ஏற்று கொள்ளப்பட்டது. 
TEPU கிளைச் செயலர் தோழர். சி. ராதாகிருஷ்ணன் ,NFTE கிளைச் செயலர் தோழர்.எ .மெகராஜ்தீன், நமது BSNLEU மாவட்டத் தலைவரும், மாநில உதவிச் செயலருமான தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர்  மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். 
புதிய நிர்வாகிகள் தேர்தலை முறையாக, நமது மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் நடத்தினார். தோழர்கள் எல். செல்வராஜன், என். ஈஸ்வரி. எஸ்.எம். புஷ்பராணி ஆகியோர் முறையே, தலைவர், செயலர், பொருளர்  உட்பட 15 நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். 
மத்திய அரசின் நிலைபாடு, நமது நிறுவனத்தின் நிலை, நமது கடமைகள், எதிர்வரும் போராட்டத்தில் முழுமையான பங்கேற்பின் அவசியம் குறித்து நமது மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர்.எஸ். சாகுல் ஹமீது நன்றி கூற, மாநாடு இனிதே நிறைவுற்றது.
மாநாட்டிற்கு பல கிளைகளில் இருந்து மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள், முன்னணி தோழர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சம், பாராட்டுக்குரியது.

No comments: