Thursday 5 March 2015

காவிமயமாக்க மோடி அரசு முயற்சி - நீதிபதி சந்துரு.

மத்தியில் ஆட்சி செய்யும்கட்சி, இந்தியாவை காவி மயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறினார்.சென்னை புதுக்கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை சார்பில் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது.இந்த கருத்தரங்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமை வகித்தார். கருத்தரங்கில் முன்னாள்நீதிபதி சந்துரு பேசியதாவது:மனித உரிமை என்பது ஒரு மனிதனுக்கு ரத்தமும் சதையும் போன்றது. மனிதஉரிமை நமது வாழ்வில் ஒருபகுதியாக மாற வேண்டும். அதனை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்கள் இலங்கையில் மட்டும் தான்இருக்கிறது என்று நினைக்காதீர்கள். சென்னையில் கண்ணகிநகர் உள்ளிட்ட சில பகுதிகள் முள்வேலி முகாம்கள் போல் உள்ளது. இங்கும் மனிதர்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலுக்கு சிறந்த உதாரண மாகும்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தடை செய்யப் பட்டுள்ளது.மனிதன் என்ன சாப்பிடவேண்டும் என்பது அவனது உரிமை. நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைக்கு மகாராஷ்டிராவில் வந்துள்ள இச்சட்டம்நாளை குஜராத்திலும், தமிழகத்திலும் கூட கொண்டு வரப்படலாம். எனவே, நமதுஉரிமையை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டாம்.மத்தியில் ஆட்சி புரியும் கட்சி, இந்தியாவை காவிமயமாக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சரஸ்வதி பூஜை, பள்ளிகளில் குரு பூஜை, பசுமாட்டை வழிபட வேண்டும்,பகவத் கீதை புனித நூல் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு யார் இந்தஉரிமையை கொடுத்தது.இதனை புரிந்து கொண்டால் மனித உரிமைகள் என்னவென்பது தெளிவாகும். இதையெல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இளைஞர்கள் பொறுமையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

No comments: