Wednesday 25 March 2015

பத்திரிக்கை செய்தி-BSNL ஊழியர் சங்கம் - முப்பெரும் விழா.

BSNL ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினம், மாவீரன் பகத்சிங் நினைவுதினம் , மகளிர் தினம் ஆகிய முப்பெரும் விழா திங்களன்றுமதுரையில் நடைபெற்றது.பீ.பீ.குளத்தில் BSNL பொதுமேலாளர் அலுவலகத்தில் உள்ளமனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு BSNL ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செல்வின் சத்தியராஜ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமாவட்டத் தலைவர் வீரபத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சூரியன் வரவேற்றுப்பேசினார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் பா.விக்ரமன் , பகத்சிங் குறித்தும், உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஜி.அருணா, மகளிர் தினம்குறித்தும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க ஸ்தாபக தினமும் கடமைகளும் குறித்துமாநிலத் தலைவர் எம்.முருகையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.சோணைமுத்து நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.----தீக்கதிர் 

No comments: