Thursday 5 March 2015

தீவிரவாதத் தடுப்புச் சட்டம் : - USAவிற்கு சீனா எச்சரிக்கை.

சீனாவின் தீவிரவாத தடுப்பு சட்டம் குறித்து, சீனாவிற்கு கட்டளையிடும் அமெரிக்காவின் கருத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்ப தோடு, எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.சீன அரசு தீவிரவாதத்தை தடுக்க அனைத்து தகவல் தொடர்பு மற்றும் இன்டர்நெட் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த திங்கள்கிழமை கருத்து தெரிவிக்கையில், சீனா அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய விரும்பினால், தீவிரவாத தடுப்பு சட்டத்தில் தற்போது சீனா எடுத்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒபாமாவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து சீன வெளியு றவுத் துறை அதிகாரப்பூர்வ பேச்சாளர் ஹூசாங் கூறும்போது, புதிய சட்டங்கள் இயற்றுவது சீனாவின் உள்விவகாரம். இதில் தலையிட அமெரிக்கா உள்பட எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை. சீனாவில் தீவிரவா தத்தை தடுக்கவும், தீவிரவாதம்பரவுவதை தடுக்கவும் தான் அந்தசட்டம் கொண்டு வரப்பட் டது.சில நாடுகள் உளவு மென்பொருட்களை தயாரித்து விற்கின்றன. இதனால் இந்த சட் டம் அவசியமாகிறது என்று தெரி வித்தார்.

No comments: