Sunday 29 March 2015

28.03.15 சிறப்பாக நடைபெற்ற CSC/TKM கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே! 28.03.15 அன்று மாலை CSC/TKM  மனமகிழ் மன்றத்தில் நமது BSNLEU- CSC/TKM கிளை மாநாடு மிகவும் சீரும் சிறப்பாக தோழர். A.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது  ...
மாநாட்டில் அஞ்சலி உரையை தோழியர். R.மஞ்சுளா நிகழ்த்தினார், ஆண்டறிக்கையை கிளைச் செயலர் தோழர்.எஸ். சாத்தாவு சமர்பித்தார், வரவு-செலவு கணக்கை தோழர் எஸ். சங்கர் சமர்ப்பித்தார், ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு ஏற்பிற்கு பின் அமைப்பு நிலை விவாதத்தை தோழர் சி. காமாட்சி சுந்தரம் துவக்கிவைத்தார்.
தோழியர்.என்.ஈஸ்வரி, தோழர்.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோரின் வாழத்துரைக்குப் பின் தோழர்கள் பி. சந்திர சேகர்,COS சி. செல்வின் சத்தியராஜ்,ACS எஸ். சூரியன்,D.S ஆகியோர் நமது BSNL நிறுவனம் இன்றைய நிலை குறித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத நிலைபாடுகள் குறித்தும்  ஆகவே, நமது FORUM அறிவித்துள்ள ஏப்ரல் 21 & 22 இரு நாட்கள் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் அனைவரும் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு சிறப்புரை நிகழ்த்தினர்.
மாநாட்டில் 15 பேர் கொண்ட கீழ்கண்ட  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தோழர்.எஸ். சங்கர் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

No comments: