Saturday 21 March 2015

20.03.15 பாளையாத்தில் "SAVE BSNL"கையெழுத்தியக்கம்...

அருமைத் தோழர்களே ! நமது FORUM முடிவின் அடிப்படையில்  20.03.15 அன்று உத்தமபாளையாத்தில் "SAVE BSNL"கையெழுத்தியக்கத்தை தோழர்கள் மிக மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். உத்தமபாளையம் நகர் முழுவதும் ஆட்டோ வைத்து, விளம்பரத்துடன் நகரின்  அணைத்து பொது மக்களிடம் கையெழுத்தை பெற்றனர். 
நிகழ்ச்சியை BSNLEUமாவட்டத் துணைத் தலைவர் தோழர்.T.K.சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு SNEA தோழர் K.பாஸ்கரன் தலைமை தாங்கினார். NFTE மாநில தலைவர் தோழர். M. லட்சம் துவக்கவுரை நிகழ்த்தினார். TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் N. சோனைமுத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக  மதுரை SSA-FORUM கண்வீனரும், BSNLEU சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலருமான தோழர். S. சூரியன் நிகழ்ச்சிக்கு நிறைவுரை நிகழ்த்தினார். BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் P. சந்திர சேகர் நன்றியுரை நிகழ்த்த இனிதே கையெழுத்து இயக்கம் நிறைவுற்றது.
உத்தமபாளையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான ஒப்பந்த ஊழியர்களும், துனைகோட்ட அதிகாரிகள் மணிவண்ணன், பாஸ்கரன், முத்துசாமி மற்றும் அனைத்து சங்க மூன்றாம் பிரிவு ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டதும், பொது மக்களின் சிறப்பான ஆதரவும் மிகுந்த மனநிறைவை அளித்தது. கையெழுத்து இயக்கம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே 1500 -க்கும் மேற்பட்ட கையெழுத்தை பெற்றது என்பது நல்ல அம்சம். தேனி மாவட்ட தோழர்களின் முயற்ச்சியை நமது BSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

No comments: